CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, June 29, 2009

எப்போ விளம்பரம் போடுவாங்க?

எப்போ இந்த சீரியல் முடியும்?
எப்போ விளம்பரம் போடுவாங்க?
அம்மா எப்போ வருவாங்க?ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்தாள்
விளம்பர மாடலின் மகள்....
தொலைக்காட்சியிலாவது
தன் தாயைப்பார்த்துக் கொண்டிருக்கலாமென்று. . .

7 comments:

தேவன் மாயம் said...

சிறு கவிதையில் பெரிய செய்தி..........

A Budding Writer(!) said...

தேவன் மாயம் ,
உங்களின் சிறு பாராட்டு , எனக்கு மிகப் பெரிய வெகுமதி...

பாராட்டுகள் மட்டுமல்ல விமர்சனங்களும், வேறுபாடுகளும் வரவேற்கப்படுகின்றன.

Takkar Stars said...

என்ன ஒரு யோசனை

அதிரைBBC said...

தொலைக்காட்சி பிம்பங்களில் விளம்பரம் வரும் நேரங்கள் தான் ஆனந்தமே.... அவைகளின் ஆக்கங்களும் சிந்திக்க வைக்கும் சிலிரிப்புக்ளும் ஏராளம்... இவை ரசித்தவை / ரசித்து கொண்டிருப்பவை...

நல்ல கவிதை...

A Budding Writer(!) said...

சத்தியமான உண்மை ங்க ...
விளம்பரங்களில் ரசிக்கும் சுவாரசியங்களை
நிறைய நிகழ்ச்சிகளில் உணர முடிவதில்லை ...

Dhivya said...

short n sweet kavithai..

bluebirds said...

இன்னும் கொஞ்சம் "ஐ கூ" வா இருந்திருக்கலாம் . இரு வரியில் !