CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, August 20, 2009

தவிக்கிறேன்....

நான் ஒரு ஓவியனாய் பிறந்திருந்தால்

உன் முகத்தினை வரைந்தே என் கை ரேகை அழிந்திருக்கும்...

ஒரு சிற்பியாய் பிறந்திருந்தால்

உன் உருவத்தினை செதுக்கியே என் உ ளியும் உடைந்திருக்கும்...

ஒரு பாடகனாய் பிறந்திருந்தால்

உன் நினைவுகளை வர்ணித்தே என் குரலும் கரைந்திருக்கும்

அட, ஒரு கவிஞனாய் பிறந்திருந்தால் கூட

உன் காதலை விவரித்தே என் சொற்களும் தீர்ந்திருக்கும்..........

ஆனால்,நானோ,

உன்னைக் காதலிக்க பிறந்து விட்டதால் ,

உன் முகம் பார்க்காத நாட்களிலும்,

உன் பார்வை தீண்டாத கணங்களிலும்,

உன் குரல் கேட்காத கனவுகளிலும்...

ஓவியனில்லா தூரிகையாய்...

சிற்பி தீண்டாத கற்களாய் ....

ஸ்ருதியில்லா ஸ்வரங்களாய்...

சிதறிக் கிடக்கும் சொற்களாய்....

தவிக்கிறேன்...............

1 comments:

Takkar Stars said...

ஓவியனாய், சிற்பியாய், பாடகனாய், கவிஞனாய் ஒருவரால் ஆக முடியும் என்றால் அது காதலால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்.