CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, August 22, 2009

நீ பிறந்த நாள்......

அருகருகே இருந்தும்

அதிகம் பேசிக் கொள்ளாமலே..

அடிக்கடி பேசிக் கொண்டாலும்

அன்பை வெளிப்படுத்திக் கொள்ளாமலே..

விவரங்கள் தெரிந்திருந்தும்

விசாரித்துக் கொள்ளாமலே...

ஆறுதல்கள் தேவையிருந்தும்

ஆசைகள் கோடியிருந்தும்

நேரங்கள் நிறைய இருந்தும்

நேசத்தை சொல்லிக் கொள்ளாமலே

கடந்து கொண்டிருக்கும் நம் இயந்திர வாழ்வில்....

நம் உறவுகளின் பலங்களை...

நேசத்தின் நினைவுகளை..

ஆறுதல்களின் அவசியங்களை...

நட்பின் நிஜங்களை...

வெளிப்படுத்த உதவ ஒரு பொன்னாள்....

நீ பிறந்த நாள்......

2 comments:

Takkar Stars said...

///நம் இயந்திர வாழ்வில்....///
அருமையாக உள்ளது

bluebirds said...

யதார்த்த கவிதை !