CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, March 21, 2009

மீண்டும் ஒரு ஜென்மம்

உன் உயிரைப் பணயம் வைத்து

ஈரைந்து மாதங்கள் கருவில் சுமந்து

உன் உயிரிலே பாதியை செலுத்தி

என்னைப் பெற்றெடுத்து

இவ்வுலகிற்குஎன்னை ஈன்ற தாயே

கண்ணின் மணியாய்

உயிரின் உயிராய்

என்னை காத்து

காலமெல்லாம் என்னைநெஞ்சிலே சுமக்கிறாய் நீயே

உன் எல்லை இல்லா அன்புக்கும்

உன் முடிவில்லா சேவைக்கும் ஈடு செய்ய

இவ்வுலகில் இந்த ஜென்மத்தில் எதுவுமில்லை ஈடாக

தெய்வத் திடம் வேண்டுவேன்

மீண்டும் ஒரு ஜென்மம்

நான் உன் தாயாக.....

Thursday, March 19, 2009

மழை - மின்னல்

சிரிக்க வைத்து அல்ல

அழ வைத்து எடுக்கும் புகைப்படம்

மேகத்தை அழ வைத்து வானம் எடுக்கும் மின்னல் படம்