CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, August 22, 2009

நீ பிறந்த நாள்......

அருகருகே இருந்தும்

அதிகம் பேசிக் கொள்ளாமலே..

அடிக்கடி பேசிக் கொண்டாலும்

அன்பை வெளிப்படுத்திக் கொள்ளாமலே..

விவரங்கள் தெரிந்திருந்தும்

விசாரித்துக் கொள்ளாமலே...

ஆறுதல்கள் தேவையிருந்தும்

ஆசைகள் கோடியிருந்தும்

நேரங்கள் நிறைய இருந்தும்

நேசத்தை சொல்லிக் கொள்ளாமலே

கடந்து கொண்டிருக்கும் நம் இயந்திர வாழ்வில்....

நம் உறவுகளின் பலங்களை...

நேசத்தின் நினைவுகளை..

ஆறுதல்களின் அவசியங்களை...

நட்பின் நிஜங்களை...

வெளிப்படுத்த உதவ ஒரு பொன்னாள்....

நீ பிறந்த நாள்......

Friday, August 21, 2009

உன் மரணப் படுக்கையில்....

உன் மரணப் படுக்கையில் நான் உன்னுடன் இருக்க மாட்டேன்....

என்னை மன்னித்து விடு அன்பே....

நீ இறப்பதற்கு முன்பே நான் இறந்து விடுவேன்,,,

அடுத்த ஜென்மத்தில் உனக்கு மூத்தவனாய்

நான் பிறந்து காத்திருக்க வேண்டுமல்லவா? :)....

Thursday, August 20, 2009

தவிக்கிறேன்....

நான் ஒரு ஓவியனாய் பிறந்திருந்தால்

உன் முகத்தினை வரைந்தே என் கை ரேகை அழிந்திருக்கும்...

ஒரு சிற்பியாய் பிறந்திருந்தால்

உன் உருவத்தினை செதுக்கியே என் உ ளியும் உடைந்திருக்கும்...

ஒரு பாடகனாய் பிறந்திருந்தால்

உன் நினைவுகளை வர்ணித்தே என் குரலும் கரைந்திருக்கும்

அட, ஒரு கவிஞனாய் பிறந்திருந்தால் கூட

உன் காதலை விவரித்தே என் சொற்களும் தீர்ந்திருக்கும்..........

ஆனால்,நானோ,

உன்னைக் காதலிக்க பிறந்து விட்டதால் ,

உன் முகம் பார்க்காத நாட்களிலும்,

உன் பார்வை தீண்டாத கணங்களிலும்,

உன் குரல் கேட்காத கனவுகளிலும்...

ஓவியனில்லா தூரிகையாய்...

சிற்பி தீண்டாத கற்களாய் ....

ஸ்ருதியில்லா ஸ்வரங்களாய்...

சிதறிக் கிடக்கும் சொற்களாய்....

தவிக்கிறேன்...............

Wednesday, August 19, 2009

பூக்களும்... இசையும்... மழையும்...

பூக்களும்... இசையும்... மழையும்...
வாழ்வின் இனிமையான தருணங்களில்
மகிழ்ச்சியைக் கூ ட்டு வ தை விடவும்....
துக்கங்களில் மனதுக்கு ஆறுதலாய் உணர்த்துவதிலும்
அதன் மகத்துவம் நிறைந்திருப்பதால் தான்
அதன் அருகாமையை மனம் என்றும் நாடுகிறது...
உனது அருகாமையைப் போலவே...