பூக்களும்... இசையும்... மழையும்...
வாழ்வின் இனிமையான தருணங்களில்
மகிழ்ச்சியைக் கூ ட்டு வ தை விடவும்....
துக்கங்களில் மனதுக்கு ஆறுதலாய் உணர்த்துவதிலும்
அதன் மகத்துவம் நிறைந்திருப்பதால் தான்
அதன் அருகாமையை மனம் என்றும் நாடுகிறது...
உனது அருகாமையைப் போலவே...
Wednesday, August 19, 2009
பூக்களும்... இசையும்... மழையும்...
Posted by A Budding Writer(!) at 5:02 AM 1 comments
Monday, June 29, 2009
எப்போ விளம்பரம் போடுவாங்க?
எப்போ இந்த சீரியல் முடியும்?
எப்போ விளம்பரம் போடுவாங்க?
அம்மா எப்போ வருவாங்க?ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்தாள்
விளம்பர மாடலின் மகள்....
தொலைக்காட்சியிலாவது
தன் தாயைப்பார்த்துக் கொண்டிருக்கலாமென்று. . .
Posted by A Budding Writer(!) at 4:44 AM 7 comments
உலகின் மிக வலிய ஆயுதம்....
உலகின் மிக வலிய ஆயுதம்
அன்பென்பது உண்மை தான் ....
எதிர்பார்த்த இடத்தில்
எதிர்பார்த்த அன்பு
கிடைக்காத போது. .
அந்த அன்பை விட
மிக மோசமானதாய்த் தாக்கும் ஆயுதம்
இவ்வுலகில்
வேறொன்றும் ஈடானாதாய் இல்லை......
Posted by A Budding Writer(!) at 4:34 AM 0 comments
Monday, June 22, 2009
ஒரு முறையேனும் திரும்பி வந்து விடு....
அன்றாடம் நடக்கும் வகுப்புகளுக்க்காய்....
ஆசையாய் வாங்கும் திட்டுகளுக்காய்....
இம்சையாய்ப் புரட்டும் புத்தகங்களுக்காய்.....
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தேர்வுகளுக்காய்.....
உவகையோடு உறங்கிய பாட வேலைகளுக்காய்.....
ஊரோடு ஒத்து வாழ்ந்து மட்டமடித்த வகுப்புகளுக்க்காய்.....
எழுதியும் எழுதாமலும் பெற்று விட்ட அரியர்களுக்க்காய்....
ஏங்கிக் கிடந்த விடுதலைக்காய்......
ஐயங்கள் இல்லாத சந்தோஷத்துக்காய்.....
ஒரு முறையேனும் திரும்பி வந்து விடு -எங்கள்
ஓடிப் போன கல்லூரி வாழ்க்கையே .....
ஒரு முறையேனும் திரும்பி வந்து விடு !
Posted by A Budding Writer(!) at 1:53 AM 2 comments
அது காதல் இல்லை என்று
காதல் பாடல்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல் நினைவில் வந்தாய்
காதல் வசனங்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல் நினைக்க வைத்தாய்
காதல் ஓவியங்களைப் பார்க்கும் போது
காரணமில்லாமல் கனவாய் வந்தாய்
அப்போது புரியவில்லை
காதலிக்க காரணம் தேவையில்லை என்று
இப்போது புரிகிறது
காரணத்தோடு வந்தால்
அது காதல் இல்லை என்று
Posted by A Budding Writer(!) at 1:48 AM 5 comments
என் கவனம் . . .
நான் பரிட்சையில் தவறிய போதெல்லாம்
என் கவனம் சிதறி விட்டது
என்று திட்டும் என் தந்தையை
ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்
என்று?
என் கவனம்
உன்னை விட்டு சிதறி இருக்கிறதென்று??? :)
Posted by A Budding Writer(!) at 1:44 AM 0 comments
Saturday, April 18, 2009
கூந்தலின் வாசம்
உன் கூந்தலில் இருந்து பூ விழுந்தது
கையில் எடுத்து
முகர்ந்து பார்த்தேன்....
உன் கூந்தல் வாசம் ............
Posted by A Budding Writer(!) at 3:56 AM 0 comments

