CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, August 20, 2009

தவிக்கிறேன்....

நான் ஒரு ஓவியனாய் பிறந்திருந்தால்

உன் முகத்தினை வரைந்தே என் கை ரேகை அழிந்திருக்கும்...

ஒரு சிற்பியாய் பிறந்திருந்தால்

உன் உருவத்தினை செதுக்கியே என் உ ளியும் உடைந்திருக்கும்...

ஒரு பாடகனாய் பிறந்திருந்தால்

உன் நினைவுகளை வர்ணித்தே என் குரலும் கரைந்திருக்கும்

அட, ஒரு கவிஞனாய் பிறந்திருந்தால் கூட

உன் காதலை விவரித்தே என் சொற்களும் தீர்ந்திருக்கும்..........

ஆனால்,நானோ,

உன்னைக் காதலிக்க பிறந்து விட்டதால் ,

உன் முகம் பார்க்காத நாட்களிலும்,

உன் பார்வை தீண்டாத கணங்களிலும்,

உன் குரல் கேட்காத கனவுகளிலும்...

ஓவியனில்லா தூரிகையாய்...

சிற்பி தீண்டாத கற்களாய் ....

ஸ்ருதியில்லா ஸ்வரங்களாய்...

சிதறிக் கிடக்கும் சொற்களாய்....

தவிக்கிறேன்...............

Wednesday, August 19, 2009

பூக்களும்... இசையும்... மழையும்...

பூக்களும்... இசையும்... மழையும்...
வாழ்வின் இனிமையான தருணங்களில்
மகிழ்ச்சியைக் கூ ட்டு வ தை விடவும்....
துக்கங்களில் மனதுக்கு ஆறுதலாய் உணர்த்துவதிலும்
அதன் மகத்துவம் நிறைந்திருப்பதால் தான்
அதன் அருகாமையை மனம் என்றும் நாடுகிறது...
உனது அருகாமையைப் போலவே...

Monday, June 29, 2009

எப்போ விளம்பரம் போடுவாங்க?

எப்போ இந்த சீரியல் முடியும்?
எப்போ விளம்பரம் போடுவாங்க?
அம்மா எப்போ வருவாங்க?ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்தாள்
விளம்பர மாடலின் மகள்....
தொலைக்காட்சியிலாவது
தன் தாயைப்பார்த்துக் கொண்டிருக்கலாமென்று. . .

உலகின் மிக வலிய ஆயுதம்....

உலகின் மிக வலிய ஆயுதம்
அன்பென்பது உண்மை தான் ....

எதிர்பார்த்த இடத்தில்
எதிர்பார்த்த அன்பு
கிடைக்காத போது. .
அந்த அன்பை விட
மிக மோசமானதாய்த் தாக்கும் ஆயுதம்
இவ்வுலகில்
வேறொன்றும் ஈடானாதாய் இல்லை......

Monday, June 22, 2009

ஒரு முறையேனும் திரும்பி வந்து விடு....

ன்றாடம் நடக்கும் வகுப்புகளுக்க்காய்....

சையாய் வாங்கும் திட்டுகளுக்காய்....

ம்சையாய்ப் புரட்டும் புத்தகங்களுக்காய்.....

ன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தேர்வுகளுக்காய்.....

வகையோடு உறங்கிய பாட வேலைகளுக்காய்.....

ரோடு ஒத்து வாழ்ந்து மட்டமடித்த வகுப்புகளுக்க்காய்.....

ழுதியும் எழுதாமலும் பெற்று விட்ட அரியர்களுக்க்காய்....

ங்கிக் கிடந்த விடுதலைக்காய்......

யங்கள் இல்லாத சந்தோஷத்துக்காய்.....

ரு முறையேனும் திரும்பி வந்து விடு -எங்கள்

டிப் போன கல்லூரி வாழ்க்கையே .....

ரு முறையேனும் திரும்பி வந்து விடு !

அது காதல் இல்லை என்று

காதல் பாடல்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல் நினைவில் வந்தாய்


காதல் வசனங்களைக் கேட்கும் போது

காரணமில்லாமல் நினைக்க வைத்தாய்


காதல் ஓவியங்களைப் பார்க்கும் போது
காரணமில்லாமல் கனவாய் வந்தாய்

அப்போது புரியவில்லை
காதலிக்க காரணம் தேவையில்லை என்று

இப்போது புரிகிறது
காரணத்தோடு வந்தால்

அது காதல் இல்லை என்று

என் கவனம் . . .

நான் பரிட்சையில் தவறிய போதெல்லாம்

என் கவனம் சிதறி விட்டது

என்று திட்டும் என் தந்தையை

ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்

என்று?

என் கவனம்

உன்னை விட்டு சிதறி இருக்கிறதென்று??? :)