CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, July 25, 2010

தாரத்தைப் படைத்தது தேவதை........

என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது

தாயைப் படைத்தார் கடவுள் .....

என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது

தாரத்தைப் படைத்தது தேவதை....

Friday, March 12, 2010

எத்தனைமுறை .........

எத்தனைமுறை கூந்தலை ஒதுக்கி விடுகிறாய் என்பதை எண்ணுவதிலிருந்து

எத்தனை முறை கண் சிமிட்டுகிறாய் என்று எண்ணும் அளவுக்கு நெருங்கி இருக்கிறேன் ......

என்றாலும் ..... இன்னும்....

உன்னை தினமும் நான் எத்தனை முறை எண்ணுகிறேன் என்பதை எண்ண முடியாமல் போகும் அளவிற்கு உன் மனதை நெருங்கும் தூரம் எவ்வளவென்று தான் தெரிய வில்லை ..........

Tuesday, December 1, 2009

மறுக்க முடிவதில்லை .....



நீ என்னோடு இருக்கின்ற
எப்போதோ எடுத்த நிழற்படங்கள்

நீ இப்போது என்னோடு இல்லாத
நிஜத்தை நினைவுபடுத்தும் போதெல்லாம்

நிஜத்தில் உன் நினைவுகள் என் நிழலாய் என்றும்
என்னுடன் இருப்பதை ஏனோ மறுக்க முடிவதில்லை .....

Thursday, November 5, 2009

என் சொந்தக் காதல் .....




காதல் கடிதம் எழுத
தோழனிடம் கொஞ்சம் கவிதைகள் கடன் வாங்கி

காதல் பரிசு வாங்க
தோழியிடம் கொஞ்சம் ரசனைகளைக் கடன் வாங்கி

வளர்த்த கடன்காரக் காதல் அல்ல என் காதல் ......

என் கவிதைகளில் ரசனை இல்லாமல் போனாலும்
என் ரசனைகள் கவிதையாய் தோன்றாமல் போனாலும்

என் காதல் எனதே எனதான சொந்தக் காதல் ......

Saturday, October 3, 2009

web site hit counter

Friday, October 2, 2009

காலத்தை வென்ற நினைவுகள்



நீ என்னோடு இருக்கின்ற நேரங்களில்
நிகழ்காலத்தில் வாழ்கிறேன்...

உன் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில்
வருங்காலத்தில் வாழ்கிறேன்...

உன்னைப் பார்த்துப் பேசி சென்றவுடன்
கடந்தகாலத்தில் வாழ்கிறேன்...


என் காலத்தை வென்ற
உன் நினைவுகள்......

Wednesday, September 30, 2009

நம் வாழ்வின் முரண்பாடுகள்....




சலிப்பாகிப் போன சந்தோஷங்கள் ..
சங்கடமாகிப் போன சவுகரியங்கள்..

எரிச்சலாகிப் போன இயந்திர வாழ்வு..
ஏமாற்றமாகிப் போன கடந்த காலங்கள்...

கசப்பாகிப்போன காரியங்கள்...
கல்லறையாகிப்போன காதல்கள்...

நெருப்பாகிப் போன நிஜங்கள் ..
நெருடலாகிப் போன நித்திரைகள்....

துணிவை இழந்த தேடல்கள்..
தூக்கம் இழந்த தூரிகைகள்...


நிஜத்தை மறந்த நினைவுகள்...
நினைக்க மறந்த நிஜங்கள்....

வாழும் முரண்பாடுகள்..
நம் வாழ்வின் முரண்பாடுகள்....