என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது
தாயைப் படைத்தார் கடவுள் .....
என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது
தாரத்தைப் படைத்தது தேவதை....
கவிதைகளை ரசிக்க ஒரு வாழ்வும் வாழ்வை ரசிக்க சில கவிதைகளும்
என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது
தாயைப் படைத்தார் கடவுள் .....
என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது
தாரத்தைப் படைத்தது தேவதை....
Posted by A Budding Writer(!) at 11:32 PM
எத்தனைமுறை கூந்தலை ஒதுக்கி விடுகிறாய் என்பதை எண்ணுவதிலிருந்து
எத்தனை முறை கண் சிமிட்டுகிறாய் என்று எண்ணும் அளவுக்கு நெருங்கி இருக்கிறேன் ......
என்றாலும் ..... இன்னும்....
உன்னை தினமும் நான் எத்தனை முறை எண்ணுகிறேன் என்பதை எண்ண முடியாமல் போகும் அளவிற்கு உன் மனதை நெருங்கும் தூரம் எவ்வளவென்று தான் தெரிய வில்லை ..........
Posted by A Budding Writer(!) at 5:25 AM
Posted by A Budding Writer(!) at 3:44 AM
Posted by A Budding Writer(!) at 2:43 AM

நீ என்னோடு இருக்கின்ற நேரங்களில்
நிகழ்காலத்தில் வாழ்கிறேன்...
உன் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில்
வருங்காலத்தில் வாழ்கிறேன்...
உன்னைப் பார்த்துப் பேசி சென்றவுடன்
கடந்தகாலத்தில் வாழ்கிறேன்...
என் காலத்தை வென்ற
உன் நினைவுகள்......
Posted by A Budding Writer(!) at 10:31 PM 1 comments

சலிப்பாகிப் போன சந்தோஷங்கள் ..
சங்கடமாகிப் போன சவுகரியங்கள்..
எரிச்சலாகிப் போன இயந்திர வாழ்வு..
ஏமாற்றமாகிப் போன கடந்த காலங்கள்...
கசப்பாகிப்போன காரியங்கள்...
கல்லறையாகிப்போன காதல்கள்...
நெருப்பாகிப் போன நிஜங்கள் ..
நெருடலாகிப் போன நித்திரைகள்....
துணிவை இழந்த தேடல்கள்..
தூக்கம் இழந்த தூரிகைகள்...
நிஜத்தை மறந்த நினைவுகள்...
நினைக்க மறந்த நிஜங்கள்....
வாழும் முரண்பாடுகள்..
நம் வாழ்வின் முரண்பாடுகள்....
Posted by A Budding Writer(!) at 3:37 AM 3 comments