CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 1, 2009

மறுக்க முடிவதில்லை .....



நீ என்னோடு இருக்கின்ற
எப்போதோ எடுத்த நிழற்படங்கள்

நீ இப்போது என்னோடு இல்லாத
நிஜத்தை நினைவுபடுத்தும் போதெல்லாம்

நிஜத்தில் உன் நினைவுகள் என் நிழலாய் என்றும்
என்னுடன் இருப்பதை ஏனோ மறுக்க முடிவதில்லை .....

Thursday, November 5, 2009

என் சொந்தக் காதல் .....




காதல் கடிதம் எழுத
தோழனிடம் கொஞ்சம் கவிதைகள் கடன் வாங்கி

காதல் பரிசு வாங்க
தோழியிடம் கொஞ்சம் ரசனைகளைக் கடன் வாங்கி

வளர்த்த கடன்காரக் காதல் அல்ல என் காதல் ......

என் கவிதைகளில் ரசனை இல்லாமல் போனாலும்
என் ரசனைகள் கவிதையாய் தோன்றாமல் போனாலும்

என் காதல் எனதே எனதான சொந்தக் காதல் ......

Saturday, October 3, 2009

web site hit counter

Friday, October 2, 2009

காலத்தை வென்ற நினைவுகள்



நீ என்னோடு இருக்கின்ற நேரங்களில்
நிகழ்காலத்தில் வாழ்கிறேன்...

உன் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில்
வருங்காலத்தில் வாழ்கிறேன்...

உன்னைப் பார்த்துப் பேசி சென்றவுடன்
கடந்தகாலத்தில் வாழ்கிறேன்...


என் காலத்தை வென்ற
உன் நினைவுகள்......

Wednesday, September 30, 2009

நம் வாழ்வின் முரண்பாடுகள்....




சலிப்பாகிப் போன சந்தோஷங்கள் ..
சங்கடமாகிப் போன சவுகரியங்கள்..

எரிச்சலாகிப் போன இயந்திர வாழ்வு..
ஏமாற்றமாகிப் போன கடந்த காலங்கள்...

கசப்பாகிப்போன காரியங்கள்...
கல்லறையாகிப்போன காதல்கள்...

நெருப்பாகிப் போன நிஜங்கள் ..
நெருடலாகிப் போன நித்திரைகள்....

துணிவை இழந்த தேடல்கள்..
தூக்கம் இழந்த தூரிகைகள்...


நிஜத்தை மறந்த நினைவுகள்...
நினைக்க மறந்த நிஜங்கள்....

வாழும் முரண்பாடுகள்..
நம் வாழ்வின் முரண்பாடுகள்....

Saturday, August 22, 2009

நீ பிறந்த நாள்......

அருகருகே இருந்தும்

அதிகம் பேசிக் கொள்ளாமலே..

அடிக்கடி பேசிக் கொண்டாலும்

அன்பை வெளிப்படுத்திக் கொள்ளாமலே..

விவரங்கள் தெரிந்திருந்தும்

விசாரித்துக் கொள்ளாமலே...

ஆறுதல்கள் தேவையிருந்தும்

ஆசைகள் கோடியிருந்தும்

நேரங்கள் நிறைய இருந்தும்

நேசத்தை சொல்லிக் கொள்ளாமலே

கடந்து கொண்டிருக்கும் நம் இயந்திர வாழ்வில்....

நம் உறவுகளின் பலங்களை...

நேசத்தின் நினைவுகளை..

ஆறுதல்களின் அவசியங்களை...

நட்பின் நிஜங்களை...

வெளிப்படுத்த உதவ ஒரு பொன்னாள்....

நீ பிறந்த நாள்......

Friday, August 21, 2009

உன் மரணப் படுக்கையில்....

உன் மரணப் படுக்கையில் நான் உன்னுடன் இருக்க மாட்டேன்....

என்னை மன்னித்து விடு அன்பே....

நீ இறப்பதற்கு முன்பே நான் இறந்து விடுவேன்,,,

அடுத்த ஜென்மத்தில் உனக்கு மூத்தவனாய்

நான் பிறந்து காத்திருக்க வேண்டுமல்லவா? :)....